ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள்…
மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது…
இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள்…
மகனை ஈன்றெடுத்த மனைவி, கணவன் உயிரோடு வீடு திரும்ப வேண்டும் என தினமும் பிரார்த்தனை செய்கிறாள்…
அதிர்ஷ்டவசமாக போரில் தப்பி பிழைத்த வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக வீடு திரும்புகிறான்…
அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்…
மூன்று வயது மகன் புரியாமல் விழிக்கிறான்…
மூன்று வயது மகன் புரியாமல் விழிக்கிறான்…
கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய
சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும்,
தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள். கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப்
பார்த்து வீரன் கேட்கிறான். “அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?” அந்தச்
சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். “நீங்கள்
ஒன்றும் என் அப்பா இல்லை” வீரன் மகனைக் கேட்கிறான். “பின் யார் அப்பா?”
“தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும்
உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான்
என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்” வீரன் அதிர்ச்சியில் உறைந்து
நின்றான்…
சாமான்கள் வாங்கி வந்த மனைவி கணவனிடம்
திடீர் மாற்றத்தைக் கண்டாள்… அவன், அவள் சமைத்ததை உண்ணவில்லை… அவளை அவன்
தொடவில்லை… அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான்…
இரண்டு நாட்கள்
இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்… மனைவி இறந்த
அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின்
நிழலைக் காண்பித்து மகன் உற்சாகமாக, “இதோ என் அப்பா…” திகைத்த வீரன் மகனை
விசாரிக்க… உண்மை வெளி வந்தது… அதாவது, தந்தை போரில் இருந்த போது, ஒரு நாள்
தாயின் நிழலைப் பார்த்து மகன், “இது யார்?” என்று வெகுளித் தனமாய்
கேட்டிருக்கிறான்… மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று
அவள், “இது தான் உன் தந்தை” என்று சொல்லியிருக்கிறாள்… சிறுவன்
அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்… இப்போது
உண்மையை உணர்ந்த வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும்
மனமுடைந்து போகிறான்… இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்டதும் வீரன் தன்
மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்… அல்லது, மனைவியும் கணவனின்
நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம்…
இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப்
பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும்… ஆனால் கணவன்
தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து
அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான்… மனைவியாவது ஏன் இப்படி நடந்து
கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம்… அப்படிச்
செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து
போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?…
எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம்…
சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை
தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும்… இந்த முட்டாள்தனத்தில் பலியாவது
உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்… நீங்களாக எதையும்
அனுமானிக்காதீர்கள்… அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக்
கொள்ளாதீர்கள்…
தவறு என்று நினைப்பதை உங்கள்
குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள்…
அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம்…
அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து
அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ
வாய்ப்புகள் உள்ளன அல்லவா?…
அதேசமயம், உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டினால், அதை சரி செய்ய கூடிய மனபக்குவத்தில் நீங்களும் இருங்கள்… இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே… இது ஒரு கதை தானே என்றோ, தத்துவம் தான் என்றோ, அறிவுரை என்றோ எண்ணி அலட்சியமாக எடுத்து கொள்ளாதீர்கள்… “தும்பை விட்டு வாலை பிடித்து பிடித்து என்ன பயன்?”
என்ற பழமொழி போல…
எதுவும் கை மீறிய பின்னர் ஏற்படும்
வருந்தத்தை தவிர்க்கவே என இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளலாம்… இதே
போன்று மனம் விட்டுப் பேசாததால், நண்பர்கள், பெற்றோர்கள், சகோதர,
சகோதரிகள், உற்றார், உறவினர்கள், முதலாளி, தொழிலாளி என பல வகைபட்ட
உறவுகளில் பிரிவுகள், வருத்தங்கள் என்று நிஜ வாழ்க்கையில் அன்றாடம்
1 Comments
அவசர முடிவுகள்தான் பல தலைவலிகளுக்கு காரணம். வாழ்க்கைக் கல்வி கதை.நன்றி
ReplyDelete